districts

img

செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் கடலூர் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கடலூர், அக்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கடலூர் ஒன்றிய 24-வது மாநாடு வெள்ளக்காரையில் வியாழ னன்று (அக்,24)  என்.நாராயண சாமி, எஸ்.சிவக்குமார் நினைவு அரங்கில் நடைபெற்றது.  மூத்த உறுப்பினர் பி.ஆறுமுகம் கொடியேற்றி வைத்தார். என்.அய்யாதுரை வரவேற்றார். எம். கலைவாணன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் ஆர். பஞ்சாட்சரம் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பு ராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மூத்த தோழர் எஸ். தட்சிணா மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உரையாற்றினார். வடக்கு ராமாபுரம் கிளை செயலாளர் பி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.  புதிய ஒன்றியக்குழு 15 பேர் கொண்ட ஒன்றிய குழுவுக்கு செயலாளராக ஆர்.பஞ்சாட்சரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கடலூர் ஒன்றிய மலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் செம்மண், மணல், குடிநீர், கொள்ளைகளை தடுக்க வேண்டும். கடலூர் கெடிலம் ஆற்றில் நெல்லிக்  குப்பம் சர்க்கரை ஆலையின் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், கோண்டூர் பகுதியில்புற காவல் நிலை யம் அமைக்க வேண்டும். திருவந்தி புரத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும், நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.