சென்னை, பிப். 28- ஆவின் பால் அட்டைகள் பெற விரும்புபவர்கள் ஆதார் கார்டுடன் அலுவலகங்களை தொடர்பு கொண்டால் ரூ.3 விலை குறைப்பில் பால் விற்பனை செய்யப்படும் எனத் தகவல் வெளி யிடப்பட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததைத் தொடர்ந்து ஆவின் பால் தேவை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. ‘புல்கிரீம்’ பால் லிட்டர் ரூ. 66 ஆக உயர்ந்தது. ஆனாலும் ஆவின் பால் விலை உயர்த்தப்படாமல் லிட்டர் ரூ. 48க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீ கடைகள் மற்றும் ஓட்டல்களில் கிரீம் பால் பயன்படுத்தப்படுகிறது. தனியார் பால் விலை உயர்ந்ததால் ஆவின் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஆனாலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதாக அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் தின சரி 13.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இது 14 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இதன் அளவை 15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பால் கொள்முதல் 35 லட்சம் லிட்டராக உள்ளது. இதில் 28 லட்சம் லிட்டர் பால் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஆவின் பால் விற்பனையை மேலும் உயர்த்தும் இலக்கில் பால் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முகவர் மற்றும் விநி யோகஸ்தர்களுக்கு கூடுதல் பால் தேவை ஏற்பட்டால் அதற்கேற்ப சப்ளை செய்ய நிர்வாகம் தயாராக உள்ளது. பால் தேவைப்படுபவர்கள் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார அலுவலகங்களை தொடர்பு கொண்டால் தேவையான அளவு பால் விநியோகம் செய்யப்படும். மேலும் 18004253300 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தாலும் ஆவின் பால் தங்குதடையின்றி விநி யோகிக்கப்படும். இதுதவிர ஆவின் பால் அட்டைகள் பெற விரும்புபவர்கள் ஆதார் கார்டுடன் அலுவலகங்களை நாடினால் ரூ.3 விலை குறைப்பில் பால் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.