districts

img

ஒன்றிய அரசு நிறுத்தியதைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதைக் கண்டித்து   தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, வடசென்னை  மாவட்டம் பெரம்பூர் பகுதிக் குழு சார்பில் சனிகிழமையன்று (டிச.24) மகாகவி பாரதி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் அமல வெற்றி ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன்,  மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அரிகிருஷ்ணன், என்.ஜபருல்லா, ஜூகைப், மாவட்ட துணை தலைவர் எம்.பி.நாசர், மாமன்ற உறுப்பினர் ஆர்.விமலா ஆகியோர் பேசினர்.