கள்ளக்குறிச்சி, ஜன.24 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றத்தை சேர்ந்த தலித் இளம்பெண் ரேகா, வீட்டு வேலை என்ற பெயரில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதை கண்டித்து உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த தலித் மாணவி கொடூரமாக சித்திரவதை செய்து தாக்கப் பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் இரு வரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் மற்றும், பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் இ. அலமேலு தலைமை தாங்கினார். மாநிலச் செயலா ளர் டி.சங்கரி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தேவி, ஏ.சக்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் வி.ராஜா, மாவட்டச் செயலாளர் வி.ஏழு மலை, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுந்தரவேல், மாவட்டச் செயலாளர் பி.சின்னராசு ஆகியோர் உரையாற்றினர்.