சென்னை,ஜூன் 8-
வளசரவாக்கம் எஸ்.வி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சவுமியா (வயது17). பிளஸ்-2 முடித்து உள்ள இவர் கல்லூரியில் சேர இருந்தார்.
இந்த நிலையில் புதனன்று இரவு 10மணி அளவில் சவுமியா வீட்டின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்த பக்கவாட்டு கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது நிலை தடுமாறிய அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே பெற்றோர் சவுமியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார்.