districts

img

போராட்டம் எதிரொலி வேட்டைக்கார இன மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோட்டாட்சியர் உறுதி

வேலூர். மே 12 -

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி - புதூர் கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் செங்கல் சூளை களில் தினக்கூலிகளாக வேலை செய்து வந்தனர்.

   இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5 அன்று அந்த பகுதிக்குள் காவல்துறையின் துணையுடன் ஜேசிபி எந்திரத்தை கொண்டு வந்த வரு வாய்த் துறையினர் நீர்ப்பிடிப்பு என்ற பெயரில்  வேட்டைக்காரன் இனத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தை அகற்ற முயற்சித்தனர். தங்களது வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கிடையில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர்.

  அரசு நிர்வாகத்தால் வாழ்விழந்து நிற்கும் வேட்டைக்காரன் இன மக்க ளுக்கு நிரந்தரமாக தொழில் செய்வ தற்கு மாற்று இடம் வழங்கக்கோரியும், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட வேட்டைக்கார இன மக்கள் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் கவிதாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

  மனுவைபெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர், அதே பகுதியில் மாற்று இடம் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் வழக்குகள் குறித்து வேலூர் காவல் துணை கண்காணிப்பாளருடன் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதி யளித்தார். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் இ.கெங்காதுரை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகாலிங்கம், வேட்டைக்காரன் சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனி ருந்தனர்.