districts

img

பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க கோரி மீனவ மக்கள் குடியேறும் போராட்டம்

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் விரிவடைந்த குடும்பங்களுக்காக 1188 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் டுமிங் குப்பத்தை சேர்ந்த மக்களை குடியேற்ற தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கண்டித்தும், பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க கோரியும் திங்களன்று (நவ.14) நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.