உளுந்தூர்பேட்டை, டிச 8- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது மாநாடு டிசம்பர் 13 முதல் 16 வரை கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறுவதை யொட்டி தியாக பூமியான வெண்மணியிலிருந்து வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. புதனன்று மாலை உளுந்தூர் பேட்டை நகரை வந்தடைந்த ஜோதி பயணக்குழுவினருக்கு நகர எல்லை யில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப் பட்டது. விவசாயிகளின் முழக்கங்க ளுக்கிடையே தியாகிகள் ஜோதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் டி.ஏழுமலை தலைமை யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி வரவேற்றார். சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் விஜூ. கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கே.கிரிஜா, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் சாமி. நட ராஜன், துணைச்செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட பொருளா ளர் எம்.சி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி...
டிசம்பர் 8 அன்று கள்ளக்குறிச்சி நகரில் அம்பேத்கர் சிலை அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம்சார்பில் நடைபெற்ற வர வேற்பு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய விஜூகிருஷ்ணன் “கரும்பு விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒன்றிய, மாநில அரசுகளும், தனியார் ஆலை நிர்வாகங்களும் பாக்கிகள் வைத்திருந்தன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் பல்வேறு தொடர் போராட்டங் களை நடத்தி பல ஆயிரங்கோடி ரூபாய் அளவிற்கு கரும்பு விவசாயி களுக்கு பெற்று தந்துள்ளது. இது வேறு மாநிலங்களில் நடைபெறாத சாதனை என்றார். இந்த ஒற்றுமை போராட்டம் தொடர வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாத்திடும் போராட்டங்களை தொடர வேண்டும்” எனக் கூறினார். 1968இல் விவசாய தொழிலாளர் களுக்கு வர்க்க போராட்டத்திற்கு எதி ராக பண்ணையார்களால் தீக்கிரை யாக்கப்பட்ட 44 தியாகிகளின் வெப்ப தீச்சுடர் 2024நாடாளுமன்றத் தேர்தலில்இரட்டை எஞ்சின்களான மோடி, அமித்ஷாவை விரட்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஏப்ரல் 5ஆம்தேதி தொழி லாளர்கள் விவசாயிகள் விவ சாய தொழிலாளர்கள் என 10 லட்சம் பேர் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்த உள்ளோம். அதில் தமிழகத்தில் இருந்தும் ஏராள மானோர் கலந்துகொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகி ஆர்.குருநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகி கே.பல ராமன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலத்தலைவர் சு.வேல்மாறன், மாநிலச் செயலாளர் எஸ்.ஜோதிராமன் உள்ளிட்ட ஏராள மானோர் வெண்மணி ஜோதி பயணக் குழுவினரை வரவேற்றனர். பின்னர் பயணக்குழு சேலம் மாவட் டத்தை சென்றடைந்தது.