districts

img

மாண்டன் ஹைட்ராலிக் நிறுவனத்தில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

திருவள்ளூர், மார்ச் 11- மாண்டன் ஹைட்ராலிக்  நிறுவனத்தின் ஊழியர்களின் 26 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் அனைத்து தொழி லாளர்களும் திங்களன்று (மார்ச் 11), பணிக்கு திரும்பினர். மாண்டன் ஹைட்ராலிக் ஆலையில் 2023 நவம்பர்  முதல்,   பணி செய்யும் நேரம் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டதையொட்டி  தொழி லாளர்கள் சிஐடியு தலைமையில் போராட்டம் நடத்தினர். நிர்வாக ஊழியர்கள் 12   பேரை,  பிப் 14 அன்று அதிரடியாக வெளியேற்றப்பட்ட னர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள்  வேலை செய்யும் நேரம் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு பற்றி சட்டவிரோதமாக பேசுவது , மிரட்டுவது என நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில்  பிப் 14 முதல் தொழிற்சாலை முன்பு அனைத்து தொழிலாளர்களும் அமர்ந்து  இரவும், பகலுமாக தொடர்ந்து போராடி வந்தனர். இந்த நிலையில் திங்களன்று (மார்ச் 11) தொழிலாளர் ஆணையரிடம் பேச்சு வார்த்தையில் நிர்வாகம் தரப்பில் கலந்து கொண்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சம்மந்தமாக அடுத்தடுத்து பேசி உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ள லாம்,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து 26 நாட்களுக்கு பிறகு திங்களன்று (மார்ச் 11)  அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர். இதனை சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.