districts

img

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பாம்பு புகுந்தது

ஜோலார்பேட்டை, பிப். 27- நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் புகுந்த பாம்பு புகுந்ததால் பெண்கள் அலறிஅடித்து ஓடினர். நாட்டறம்பள்ளி அருகே கலைஞர் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை அறை, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த மருத்துவமனையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீரென 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது. இதை கண்டு அங்கிருந்த பெண்கள் மற்றும் வார்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் கொண்டுபோய் விட்டனர்.