சென்னை, ஆக.20-
தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. தற்போது சில்லரையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. முதல் தரமான தக்காளி கோயம் பேடு சந்தையில் கிலோ ரூ.42 ஆக உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
இஞ்சி விலை மட்டும் இன்னும் உயர்வாக உள்ளது. இஞ்சி மொத்த விலையில் கிலோ ரூ.220, சில்லரையில் கிலோ ரூ.280 வரை விற்கப்படுகிறது. புது இஞ்சி விலை கிலோ ரூ.80 ஆக உள்ளது. தற்போது பெரிய வெங்காயம் விலை அதிகரிக்க தொடங்கி யுள்ளது.
முதல் தரமான பெரிய வெங்காயம் அதிகம் விளை யும் அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்திர பிர தேசம் ஆகிய மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனை விலை கிலோ ரூ. 60 முதல் ரூ.70 வரை உயர வாய்ப்புள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்வதால் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.