திருவள்ளூர், ஆக. 27- கும்மிடிப்பூண்டி ஐயர் கண்டிகை கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமித்துள் ளதை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கும்மிடிப் பூண்டி பிடிஒ அலுவல கத்தை முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ளகெட்ண மல்லி ஊராட்சிக்கு உட்பட்ட ஐயர் கண்டிகையில் அதே கிராமத்தை சேர்ந்த சிலர், சர்வே எண்கள் 478, 479/1, 510ல் உள்ள அரசிற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் 11 ஏக்கர் அளவிற்கு ஆக்கிர மித்துள்ளனர். இதனால் வரத்து கால் வாய், குளம் போன்ற வற்றிற்கு மழைநீர் செல்ல முடியாமல் வழிகளை அடைத்துள்ளனர்.மேலும் நூறு நாள் வேலை செய்ய வும் இடமில்லை என்பதால், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்டு ஊராட்சி யில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐயர் கண்டிகை கிராம மக்கள் 2022 ஆம் ஆண்டு பிடிஒ மற்றும் வட்டாட்சியர் ஆகி யோரிடம் மனு அளித் திருந்தனர். இதையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித் துள்ளவர்கள் மீது குற்றவி யல் நடவடிக்கை எடுக்கப் படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனினும் ஆக்கிரமிப்பு களை இதுவரை அகற்ற வில்லை. நிலங்கள் அனைத் தும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் தற்போது வரை உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரிடம் கேட்டால், வட்டாட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைவிரிக் கிறார். இந்த நிலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகத்தை முற்று கையிட்டனர். இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் சென்ற போது, இதை பிடிஒ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொறுப்பை தட்டிக் கழித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றா விடில் நகரமாட்டோம் என்று பொதுமக்கள் உறுதி யோடு கூறியதால் அடுத்த 2 வாரத்தில் ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட் சியர் சரவணகுமாரி தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.