districts

img

காவல்துறை விசாரணைக்கு சென்றவர் மரணம்

சென்னை, டிச. 21- சென்னை, கொளத்தூர் நீலம் கார்டன் 3ஆவது தெருவை சேர்ந்தவர் தினேஷ் (26). இவரை துரைப்பாக்கம்  காவல் துறை யினரால் செவ்வாயன்று இரவு சந்தேகத்தின் பேரில் விசார ணைக்கு அழைத்துச் சென்றுள் ளனர். பின்னர் வீடு திரும்பிய அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் தன்னை கடு மையாக தாக்கியதாக தெரிவித் துள்ளார். உடனடியாக குடும்பத்தி னர் அவரை  ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள் ளனர். அவரை பரிசோதித்த மருத் துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவண தமிழன் தலைமையில் மருத்துவமனை முன்பு வாலி பரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் பவன் குமார், உதவி ஆணையர் லட்சுமணன், கோட்டா ட்சியர் ஆகியோர் சங்க நிர்வாகி களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது குடும்பத்தினர் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடத்தவும்,  உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி யளித்தனர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட பொருளாளர் அ.விஜய், மாவட்ட துணைத் தலைவர்ச.முருகேசன், ராயபுரம் பகுதி தலைவர் வி.தீபா, செயலாளர் எஸ்.நீதிதேவன், உயிரிழந்த தினேஷ் மனைவி கவுசல்யா உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.