districts

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதித்தவர்

சென்னை, ஜூன் 21- சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், புதன்கிழமை (ஜூன் 21) மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்ததால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ராமலிங்கம் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை  அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.