districts

img

தெருவின் நடுவே சுற்றுச்சுவர் குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு

சென்னை, ஏப். 26 - மக்கள் பயன்படுத்தும் சிமெண்ட் தெருவின் நடுவே சுற்றுச்சுவர் அமைக்க குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜாபர்கான் பேட்டை திருநகரில் 35 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்ட வடிவ குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 7 வட்ட வடிவ குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 4 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. தற்போதுள்ள குடி யிருப்புகளுக்கு தெற்கு பகுதியில் எஞ்சிய 3 வட்ட வடிவ குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப் பட்டது. பல்வேறு காரணங் களால் அந்த திட்டம் கைவிட ப்பட்டது. அந்த இடத்தில் தற்போது தலா 5 தளங்கள் கொண்ட 4 குடியிருப்புகளை வாரியம் கட்டுகிறது. அதில் 120 வீடுகள்கள் உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையொட்டி குடியி ருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி யுள்ளது. இதற்கான அளவீடு செய்யும் பணி முடிந்துள் ளது. இதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள சிமெண்ட் தெருவின் 4ல் 3 பகுதியை  வளைத்து சுவர் அமைக்க உள்ளனர். இந்த சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் தெருவின் அகலம் 3 அடி யாக சுருங்கிவிடும் என்ப தால் அங்குள்ள வட்டவடிவ இல்லம் குடியிருப்போர் நல ச்சங்கம் எதிர்ப்பு தெரிவித் த்துள்ளது. இந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், விருகம் பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் பார் வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் நாகை மாலியை சந்தித்து  குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.