புதுச்சேரி, செப். 24- புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகயை வலியுறுத்தி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உழவர்கரை நகர செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் பேசினார். மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், சீனிவாசன், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்த், சஞ்சய் மற்றும் பலர் பேசினர். குமரன் நகர், குறிஞ்சி நகர், அசோக் நகர், தில்லை கண்ணம்மா நகர், பொதிகை நகர், நாவர்குளம், வாசன் நகர், ஆகிய பகுதியில் உள்ள குண்டும் குழியு மாக உள்ள உட்புற சாலைகளை சீர் செய்ய வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படுதை தவிர்க்க வேண்டும், செண்பக விநாயகர் நகர் பகுதியில் குடியிருக்கும் மக்க ளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் இதில் வலியுறுத்தப்பட்டன.