தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள அரசாணைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஒஎச்டி ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திங்களன்று (ஆக.7), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கதிர்வேலு தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.ஜி.சந்தானம், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் குமரவேல், பழனி, தீபா, சிபிஎம் திருக்கண்டலம் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி ஆகியோர் பேசினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அரசாணைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.