districts

img

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கவரைப்பேட்டையில் துவங்கியது

திருவள்ளூர், செப் 2- கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெள்ளியன்று (செப்-1)  "புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்"  கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் முன்னிலையில்  தொடங்கப்பட்டது. 100 நாள் வேலை செய்யும் இடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலகிருஷ்ணன் , புருஷோத்தமன் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் தன்னார்வலர் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.  புதியதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஆசிரியை   ரேவதியை  அறிமுகப்படுத்தி இவ்விழாவை தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி  வரவேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினுடைய நோக்கம், அதனுடைய செயல்பாடு, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.