விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம் அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட வேடம்பட்டு என்ற இடத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளன. அங்கு வியாழனன்று காலை வழக்கம் போல தேசியக்கொடி ஏற்றியிருந்தனர். அது தலைகீழாக ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது, அதனை அந்த வழியாக சென்ற சிலர் படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது, வைரலாகி வருகிறது.