சென்னை.அக்.15- டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மக்கள் நல்வாழ்வு துறை பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ எனும் கொசுக்கள் நம்மை கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும். இது, தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றாலும் மற்றவருக்கு பரவாது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்க ளாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,317 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 229 கையினால் இயங்கும் புகைப்பரப் பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப் பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப் படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப் பான்களுடன் இரண்டு பேர் என 200 வார்டுகளுக்கும் 400 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 247 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 3 பேர் என நீர்வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின் றன. மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10,97,632 வீடுகளில் மேற் கொள்ளப்பட்ட களஆய்வில் 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் கள ஆய்வு மேற் கொள்ள மண்டல சுகாதார அலுவல ரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில், அலட்சிய மாக இருக்கும் வீட்டு உரிமை யாளர்கள் கள ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொசுப் புழுக்களை ஒழிப்பது என்பது இயலாத காரியம். முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொசுப் புழுக்களை அழிக்க முடியும். அப்போது தான் டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பரவுவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.