விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 7ஆம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் விளக்க பிரச்சாரக் கூட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.