சிதம்பரம், ஆக. 21-
சிதம்பரம் கோவிந்த சாமி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மீதிகுடி ரோடு பகுதியில் உள்ள ஏ.வி பை னான்ஸ் உரிமையாளர் வெங்கடேசனிடம் ரூ. 22 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு, வட்டியும் அசலும் ரூ. 79 ஆயிரம் வரை கட்டியுள்ளதாக கூறி யுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வெங்கடேசன் மற்றும் அவரிடம் வேலை செய்து வரும் சபரி இருவரும் தமிழ்ச் செல்வி வீட்டிற்குச் சென்று இதுவரை ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி காட்டியுள்ளதாகவும் மீதி ரூ. 60 ஆயிரம் உள்ளது. அந்த தொகையை மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில் தமிழ்ச்செல்வியை ஆபாசமாக திட்டியுள்ளார். இத னால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சபரியை தேடி வருகின்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் பைனான்ஸ் அலுவலகத்தில் வைத்திருந்த பல்வேறு கையெழுத்திட்ட வெற்று பத்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.