districts

img

 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஒன்றிய அரசின் செறியூட்டப்பட்ட அரிசி விற்பனையை திட்டத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் செவ்வாயன்று (மே-16)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்கோட்டை வட்ட தலைவர் டி.விஸ்வநாதன் தலைமையில் விச மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத், பெ.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வாசுதேவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்(சிபிஐ )மாவட்ட செயலாளர் ஜெ.அருள் ஆகியோர் பங்கேற்றனர்