districts

img

12 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் இல்லை தொகுப்பூதிய ஊழியர்கள் உண்ணாநிலை

சிதம்பரம், மே 9- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழி யர்கள் பணி நிரந்தரம் கோரி தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிய மர்த்தப்பட் டனர். இவர்களை இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 12 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் 12 நாட்களாக பல்கலைகழக வளாகத்தில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 13ஆவது நாளான திங்களன்று (மே 9) அனைவரும் தமிழக முதல்வர், வேளாண் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் படங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்யும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.