districts

img

குடிசைகளை மீண்டும் சூழ்ந்தது தண்ணீர்

விழுப்புரம்,ஜன.9- விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில்  சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பூம்பூம் மாடு வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.  இவர்கள் இந்து ஆதி யன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 4- ஆண்டுகளாக மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், சிறு மழை பெய்தால் நீர் பிடிப்பு அதிகரித்து குடிசைகளில் தங்க முடியாத நிலை ஏற்படும். கடந்த ஆண்டு புயல் மழையின் போது இதே போன்று தண்ணீர் தேங்கி அருகிலுள்ள பள்ளி கூடத்தில் பல நாட்கள் தங்கவைக்கப்பட்டனர். அதன் பிறகு, வீட்டு மனைப் பட்டா கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந் தனர். இதற்காக மரக்கா ணம் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு சென்று பல  முறை மனுவும் கொடுத்த னர். ஆனால், இதுவரை  நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது கனமழை பெய்து வருவதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொண்டால் மீண்டும் அரசுப் பள்ளியில் தங்கி உள்ளனர்.  இதன்பிறகாவது, நிரந்தரமாக குடியிருக்க அரசு  வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.