districts

img

வாய்க்கால் பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீடு இடிந்தது

கடலூர், டிச.31- பாதிரிக்குப்பத்தில் வடிகால் வாய்க்காலில் பள்ளம் தோண்டிய போது வீட்டின் சுவர் இடிந்து சேதம் அடைந்ததில், வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்துள்ளது.  கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெரு வில் பெயிண்டர் பாரதி ராஜா என்பவரின் வீடு  உள்ளது. இந்த  வீட்டின் சுவர் அருகில் வடி கால் வாய்க்கால் அமைப்ப தற்காக பள்ளம் தோண்டப் பட்டது. பல நாட்களாகியும் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலை யில் பாரதிராஜா வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டு உபயோக பொருட்கள் கட்டில், மிக்ஸி, டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.  இதனால் இரண்டு பெண் குழந்தைகளை உள்ளடக்கிய  அந்த குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சமைப்பதற்கு கூட வழியில்லாமல் அவ திப்படுகிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும், சுவர் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்க ளுக்கும், வீட்டிற்கும் நிவா ரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்த தில் பாதிக்கப்பட்ட அந்த வீட்டை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ராஜேஷ் கண்ணன்,  வி.சுப்புராயன் ஆகியோர் பார்வையிட்டனர்.