பாபநாசம், பிப்.23- மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய - மாநில அரசுகளில் ஏற்படுத் தக் கூடிய மாற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் பூஞ்சி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது. ஆளு நர்களே மாநிலங்களுக்கு தேவை யில்லை எனவும் அல்லது ஆளுநர்கள் குற்றவியல், அரசியல் அமைப்பு மீறல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களை நீக்குவதற்கான விசா ரணை அதிகாரம் மாநில சட்டமன்றப் பேர வைக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். மேலும், மாநில ஆளுநரை நிய மிப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட மாநில அரசை கலந்தாலோசித்து மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் களை நியமனம் செய்ய வேண்டும். ஆளுநர்கள் தங்களது விருப்புரிமை அதிகாரங்களை அரசியல் கண்ணோட் டத்தோடு தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோர வேண்டும். அமைச்சரவை மற்றும் சட்டமன்றத் தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத் தும் வகையில் சில மாநில ஆளுநர்கள் செயல்படுவதால் மேற்கண்ட பரிந்து ரைகளை ஒன்றிய அரசிற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் மனிநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.