சென்னை, ஏப். 29- வெறுப்பு பிரச்சாரம் செய்வோர் மீது, உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி தமிழ்நாடு அரசே தலையிட்டு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி வலியுறுத்தினார். ஆலந்தூர் தொகுதி மக்களின் தேவைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று (ஏப்.28) நங்கநல்லூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி பேசுகையில், “தமிழ்நாட்டில் ஒருகோடி பேர் குடி நோயாளிகளாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் இடையூறாக உள்ள 500 கடைகளை மூடுவதாக அரசு அறிவித்து விட்டு, மைதானம், விளையாட்டு கூடங் களை குடிப்பகங்களாக (பார்) மாற்ற முயற்சிக்க கூடாது”என்றார். இந்தியாவில், பசுமாட்டின் பெயரால் நடைபெற்ற 85 வன்முறை சம்பவங்களில் 45 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 115 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதத்தின் பெயரால் வெறுப்பு பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது. மதச்சார் பின்மையை சிதைத்து வருகிறது. தமிழ கத்திலும் வெறுப்பு பிரச்சாரம் தலை தூக்கி வருகிறது. உச்சநீதிமன்ற வழி காட்டல்படி, புகார் இல்லையென்றா லும் அரசே தலையிட்டு வெறுப்பு பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆட்சியாளர்கள் விரைந்து தீர்வு காண வேண்டும். மக்க ளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் குப்பைகளை முறையாக அகற்றா விடில், அரசு அலுவலகங்களில் கொண்டு வந்து கொட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார். கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் கே.பாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் ந.வெங்கடேசன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.மோகன்ஜி, கே.முரளி, எம்.ராஜா மணி, கே.வி.சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் மோகன், ஜான்சி, பார்த்தசாரதி மற்றும் கோகுல் (வாலி பர் சங்கம்), சுரேஷ் (மாற்றுத்திறனாளி கள் சங்கம்), ஜெயராமன் (சிஐடியு), சங்கீதா (மாதர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.