சென்னை,டிச. 21 தொழுநோய் என்றாலே ஓடும் மக்கள் மத்தியில் அதனை ஒரு சவாலாக எடுத்து, மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்றி இன்று அந்த நோயை விரட்டி அடித்து, அதன் மீது மக்களுக்கு இந்த ஐயப்பாட்டை போக்கிய பங்கு சென்னை செனாய்நகரில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனைக்கு உண்டு. அம் மருத்துவமனையின் பொன் விழா மருத்துவ மனையின் தலைவர் குரியன் தாமஸ் தலைமையில் நடை பெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் மருத்துவமனையின் இயக்குநர் மரியநாதன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.