நடுவானில் இயந்திரகோளாறு சென்னை திரும்பிய விமானம்
சென்னை, ஜன.17- சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கவுகாத்திக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 154 பயணிகள் 8 ஊழியர்கள் என 162 பேர் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கும்படியும் அதோடு சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவும் உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்பு இந்த விமானம் மாலை 4.28 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரை இறங்கியது. உடனடியாக விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
கடற்கரையில் ஜன.29 இணைய வழி குற்றதடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்”
சென்னை, ஜன. 17- தமிழ்நாடு காவல்துறை யின் இணையவழி குற்றப் பிரிவு சார்பில் எதிர்வரும் ஜனவரி 29ஆம் தேதி மெரினா கடற்கரை சாலை யில் மாலை 5:00 மணிக்கு “சென்னை 1930 விழிப்புணர்வு நடைபய ணம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இணையத்தில் உள்ள சைபர் குற்றங்க ளின் தடுப்பு பற்றியும் மற்றும் அதை சமூ கத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடை முறைகளை ஊக்குவிப்பது நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு நடை பயண மானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து வகை நபர்களையும் சேர்த்து சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகும். இந்த நிகழ்ச்சி, சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை பாது காப்பது மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பராமரிப்பதில் உதவும் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.பொது மக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாது காப்பான இணைய சூழலை உரு வாக்க அழைக்கின்றோம். அனைத்து பங்கேற்பாளர்க ளுக்கு நடைபயணம் முடித்தவுடன், பங்கேற்புக் கான அடை யாளமாக “பிளாக்செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழை” பெறுவார்கள். நிகழ்ச்சிக்கு https:// 1930walkathon.in என்ற லிங் மூலம் முன்பதிவு செய்யு மாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
ரவுடி சரவணனை 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு கைதிகள் வார்டுக்கு மாற்றம்
சென்னை, ஜன. 17- ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கைதிகள் வார்டுக்கு ரவுடி சரவணன் மாற்றப்பட்டுள்ளார். இவரை 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி குட்செட் பகுதியில் பிரபல ரவுடி பாம் சரவணன் புதன்கிழமை இரவு காவல் துறையினரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வியாழக்கிழமை அவ ருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை யடுத்து சரவணன், ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் உள்ள கைதி கள் தங்கும் வார்டுக்கு வெள்ளியன்று மாற்றப் பட்டார். இந்நிலையில் பாம் சரவணனை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற 10ஆவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டார். இதற்கிடையே பாம் சரவணன் காவல் துறை யினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோயம்பேட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பன்னீர் செல்வத்தை ஆந்திரா எல்லைக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை குறித்து கோயம்பேடு காவல்துறை யினர் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். விசா ரணையின்போது யார், யார் கொலையில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: ஜாமீன் கோரிய இருவர் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை, ஜன.17- கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்தாண்டு ஜூன் 19 அன்று விஷ சாராயம் குடித்து 69 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் கைதான சின்னத்துரை, சாகுல் ஹமீது ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை (ஜன.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்து விட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும், என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வரும் ஜன.23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
ராணிப்பேட்டை, ஜன. 17 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதனன்று (ஜன.22) நடைபெறுகிறது. இந்த முகாமில், நெமிலி வட்டத்தை சார்ந்த பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோரிக்கை மனுக்கள் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
கடலில் அலையில் சிக்கிய மாணவரை மீட்ட அலைசறுக்கு வீரர்
புதுச்சேரி, ஜன. 17- புதுவை அருகே காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர் படித்து வருகிறார். இவர் கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பம் கடற்கரையில் நேரம் கிடைக்கும்போது குளிப்பது வழக்கம். காணும் பொங்கலன்று ஏராள மான சுற்றுலா பயணிகள் அங்கு கடலில் குளித்துக் கொண்டி ருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கி னார். நீந்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அலைசறுக்கு பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர் குரு, அலைசறுக்கு விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் போர்டை கொண்டு கடலுக்குள் சென்றார். அங்கு தத்தளித்துக் கொண்டி ருந்த கல்லூரி மாணவரை மீட்டு தந்திராயன்குப்பம் மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள், அலை சறுக்கு வீரர் குருவுக்கு கை கொடுத்து நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்தனர்.
சிறுமி விழுந்து உயிரிழந்த விவகாரம் தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.13- விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (ஜன.17) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவில், விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என சிறுமியின் தந்தை பழினிவேல் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் கூறவில்லை. சிறுமி மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணையை தொடர்ந்து, தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரபாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் காலிப்பணியிடங்களால் அலைக்கழிக்கப்படும் மக்கள்
விழுப்புரம், ஜன.17- வீரபாண்டி மின் வாரிய அலு வலகத்தில் ஓராண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள மின்பொறியாளர் மற்றும் மின் ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் செயற்பொறியாளர் கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் மின்சார வாரிய அலுவலகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 20 கிராமங் களையும், நூற்றுக்கும் மேற்பட்ட மின்மாற்றிகளையும் பராமரிக்கும் மின்சார வாரிய அலுவலகம் ஆகும். இங்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக உதவி மின் பொறியாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அரகண்டநல்லூர் உதவி மின் பொறியாளர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் மின் பாதை ஆய்வாளர், கம்மி யர், மின் உதவியாளர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன் காரணமாக, குறைந்த மின் ஊழியர்களை வைத்துக்கொண்டு பராமரிப்பு பணிகள் மட்டும் தான் நடைபெறுகிறது. புதிதாக மின் கம்பங்கள் நடுவதற்கு புதிதாக மின் மாற்றிகளை வைப்பதற்கு புதிய மின் விரிவாக்கம் செய்வதற்கு தடையாக உள்ளது. இதனால், மின் நுகர்வோர், விவசாயிகள், பொது மக்கள் மின் இணைப்பு பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வீரபாண்டி பகுதி கிளைகள் சார்பில் செயலாளர் எஸ். சையத் ஜஹாங்கீர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வீரபாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக பொது மக்கள் தினசரி அலைக் கழிக்கப்படு கிறார்கள். மேலும் வீரப்பாண்டி தலைமையிடத்தில் தங்கி பணி செய்வதற் கான மின்சார வாரிய ஊழியர்கள் கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயத்ரி என்பவர் வீரபாண்டி உதவி மின் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த உதவி மின் பொறி யாளரும் இன்று வரை பணிக்கு வரவில்லை. அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றால் உதவி மின் பொறியாளர் இல்லை. இல்லை.. இல்லை... என்கின்ற பதில் தான் நிரந்தரமாக கிடைக்கிறது என மக்கள் வேதனை படுகின்றனர். எனவே, தமிழக அரசும் தமிழ்நாடு மின்சார வாரியமும் வீரபாண்டி பகுதி மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திடும் வகையில் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உதவி மின் பொறியாளர் மற்றும் 10 மின்சார வாரிய ஊழியர்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வால் இ-ஸ்கூட்டருக்கு மாறும் வாகன ஓட்டிகள்
புதுச்சேரி, ஜன.17- கடந்த 2 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரு கிறது. இதுஒருபுறம் இருக்க, புதுச்சேரி மாநி லத்தில் போக்குவரத்து நெருக்கடி, சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 2 ஆயிரத்து 638 ஆக இருந்த இ-ஸ்கூட்டர் விற்பனை, கடந்த ஆண்டு (2024) 3 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர் வால் பெரும் பாலான இரு சக்கர வாகன ஓட்டி கள் இ-ஸ்கூட்டருக்கு மாறி யுள்ளனர்.