districts

img

வாய்க்காலில் பிணத்தை சுமந்து செல்லும் அவலம்

கடலூர், ஜூன் 6-

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் கிறிஸ்துவ மதத்தவர்கள் சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக இவர்கள்  பயன்படுத்தி வரும் பாதை யில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது.

    ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும்  போது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. அந்த வாய்க்கால் மீது பாலம் கட்டித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வா கம் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். மேலும் மழைக்காலங்க ளில் மிகவும் அவதிப்படு வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

   இந்நிலையில் அந்த பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற னர். எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக பாலம் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்க ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.