districts

img

தண்ணீரின்றி காய்ந்து போன நெற் பயிரால் விவசாயி கண்ணீர்

கள்ளக்குறிச்சி,மே 8 – கோடைவெயிலில் நெற்பயிர் கருகி போனதால் விரக்கியின் விளிம்பிற்கு விவசாயி தள்ளப்பட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை வட்டம், இருந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பவுல்ராஜ் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிர் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சியின் காரணமாக கிணற்றில் நீர் வற்றிப் போனதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகிப் போனது. ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வீதம் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் தண்ணீர் இன்றி  நெற்பயிர் கருகிப்போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்ப சூழ்நிலையும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது என்று அவர் வேதனையுடன் கூறினார். இருந்தை கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்த மான ஏரியில் தற்போது வரை விவசாயம் செய்ய போதுமான அளவு தண்ணீர் இருந்தும் விவசாயி கோவிந்தன் மகன் ரவி, பெருமாள் மகன் குமார், இருவரும் கடைமடை விவ சாயிகளான எங்களுக்கு தண்ணீர் வருவதை தடுத்து மதகை அடைத்துக் கொள்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கியதாஸ், பாதிக்கப்பட்ட விவசாயி உடன் திரு நாவலூர் வட்டாட்சியரை சந்தித்து பொதுப்பணித்துறை ஏரியிலிருந்து தண்ணீர் விடுவதற்கான வாய்க்கால்களை தூர்வாரியும் விவ சாயிக்கு இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.