கொடுக்கல் வாங்கல் கொலையில் முடிந்தது
விழுப்புரம், அக்.1- விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழ முக்கலை சேர்ந்த பாபு விற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்பரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு சனிக்கிழமை வந்தார். அப்போது முரளி தாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளி தாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இரு வருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒரு வரை ஒருவர் தாக்க கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளி தாசின் வலது காலில் வெட்டி னார். இதனால் பலத்த காய மடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறி னார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி யோடினார். அங்கு விவ சாய பணியில் ஈடுபட்டிருந்த வர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டும், கத்தியால் வெட்டப் பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளிதாஸ் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முரளி தாசை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பூமாலை வணிக வளாகத்தில் பொருட்காட்சி
விழுப்புரம்,அக்.1- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் . சி பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உற்பத்தி பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட பல்வேறு வகைகளில் தமிழக அரசின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் மாணவர்களிடையே கல்லூரி சந்தை, மாவட்ட அளவில் கண்காட்சி, மாநில அளவில் விற்பனை கண்காட்சிகள் வாயிலாக அரங்குகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 29ஆம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சி அக்டோபர் 6 ஆம் தேதி வரை விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியினை பார்வையிட்டு, சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சத்துணவு திட்ட முட்டைகளை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி, அக்.1 அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டங்களில் குழந்தைகள் மற்றும் மாண வர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை தனி நபர்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் உணவகங்களில் தரம் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சின்னசேலத்தில் உள்ள Heart Beat என்ற பெயரில் நடத்தப்படும் தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட போது அரசின் முத்திரை யிடப்பட்ட அரசால் அங்கன்வாடி குழந்தை களுக்கு வழங்கக்கூடிய இரண்டு அட்டை முட்டைகள் உணவகங்களில் இருந்ததை தொடர்ந்து அந்த உணவுகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களால் அபராதம் விதித்தனர். மேலும் காவல்துறை யினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உணவகத்தில் வேலை செய்யும் சபரி என்ற நபர் கடலூர் மாவட்டம் மங்களூர், ஒரங்கூர், குடிகாடு பகுதியில் இருந்து அங்கன்வாடி மையத்திற்கு ஒதுக்கப்பட்ட முட்டை களை உணவகத்திற்கு எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அரசின் விதிமுறைகளை மீறி முட்டை பயன்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் தலைவர் அறிவரையின்படி உணவகத்திற்கு வருவாய் துறையினர் சீல்வைத்தனர். அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுகளில் தமிழக அரசு குழந்தை கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டைகளை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ தனியார் உணவு நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தினாலோ சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு
சென்னை, அக். 1- வணிக பயன்பாட்டிற் கான எரிவாயு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. மாதம்தோறும் ஒன்றாம் தேதி எரிவாயு சிலிண் ண்டர்களின் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாத இறுதியில் வீட்டு உப யோக யன்பாட்டுக்கான சிலி ண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தொட ர்ந்து அடுத்த இரண்டு நாட் களில் செப்டம்பர் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற் கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோ பர் 1ஆம் தேதி வணிகப் பயன் பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள் ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன் பாட்டு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு ள்ளது. செப்டம்பர் 30 வரை 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 1 முதல் 1,898 ரூபாய்க்கு விற்பனை செய் யப்படவுள்ளது. அதே போல், 5 கிலோ சிலிண்டரின் விலையும் 49 ரூபாய் உயர்த்தப்பட்டு 544 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை யாகவுள்ளன.
ரயில் நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு
சென்னை, அக்.1 சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப் பட்டது.இந்நிலையில் இந்த ரயிலுக்காக வழக்க மாக செல்லும் வைகை, பாண்டியன், பொதிகை உள் ளிட்ட அதிவிரைவு ரயில் களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள் ளது. இதற்கு ரயில் பயணி ள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
இன்றும் ரயில்கள் ரத்து
சென்னை,அக்.1- ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திங்களன்றும் (அக்.2) சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரையும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10.30 முதல் மதியம் 2.30 மணி வரை மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெரம்பூரில் 1 டன் குட்கா பறிமுதல்
சென்னை, அக். 1- பெரம்பூரில் பழுதாகி நின்ற லாரியில் இருந்து ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த லாரி ஒன்று பழுதாகி நின்றது. இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் காவல் துறையினர் அந்த லாரி ஓட்டுநரிடம் விசாரனை நடத்தனர். அப்போது ஓட்டுநர் லாரியில் என்ன இருக்கிறது தெரியாது என்று முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரியின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து சோதனை செய்தபோது பண்டல் பண்டலாக குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் 30 பண்டல்களில் இருந்த 1 டன் குட்காவை பறிமுதல் செய்து, உத்தரபிரதேச மாநிலம் சிரியாபூர் பகுதியைச் சேர்ந்த ரிங்கு (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெங்குவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்: மேயர் பிரியா
சென்னை, அக். 1- சென்னையில் டெங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 1,000 பகுதிகளில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிறன்று (அக். 1) தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து வழங்கப்பட்டது. மேலும் டெங்கு மற்றும் மழைக்கால நோய் பரவல்களை தடுப்பது குறித்தும், டெங்கு மற்றும் மழைக்கால நோய் எவ்வாறு பொதுமக்களுக்கு பரவு கிறது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மேயர் பிரியா செய்தியாளர்களி டம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப் பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் அதிகமாக பரவி வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் 1இல் இருந்து 15 வரை மூன்று மருத்துவ முகாம்கள் என்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. டெங்கு விழிப்புணர்வு குறித்து மாந கராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் அருகே பிடித்து வைக்கக்கூடிய நன்னீர் மூலமாகவே டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசுக்கள் உற்பத்தி யாகிறது. எனவே பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருக்கக்கூடிய தண்ணீரை உடனுக்குடன் பயன்படுத்தி சுத்தம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு 346 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் காலை மற்றும் மாலை என இரு வேலைகளும் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால்தான் டெங்கு நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.