கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி சார்பில் “மாற்றத்தின் அரும் தலைவர்! மகத்தான பெரும் கலைஞர்” என்ற தலைப்பில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை (ஜூன் 17) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் டி.சதீஷ்குமார், எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், பி.ஸ்ரீராமுலு. கே.சரஸ்வதி எம்.சி., மே.ஜனார்த்தனன், வே.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.