districts

img

பழங்குடி மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும்: அதிகாரிகள் உறுதி

திருவள்ளூர், ஏப் 13- திருவலாங்காடு பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதியளித்ததால் தொடர் முழக்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திரு வலாங்காடு ஒன்றியத்திலுள்ள பழங்குடி இருளர் மக்களுக்கு தொகுப்பு வீடு சாலை வசதி மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர் முழுக்க போராட்டம் நடத்த அறிவித்ததின்  எதிரொலியாக போராட்டத்தை கைவிடுமாறு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். திருவலாங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்குடி இன மக்கள் வாழும் வியாசபுரம் ஊராட்சி  மக்க ளுக்கு சாலை வசதி, மின்விளக்கு அமைத்து தரவேண்டும்,  அறுங்குளம் ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு மற்றும் சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும்,  பூனிமாங்காடு ஊராட்சி புதிய வெங்கடாபுரத்தில்  வசிக்கும் மக்க ளுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும்,   வீராபுரம் ஊராட்சி புலிய குண்டாவில் வசிக்கும் மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்,  களாம்பாக்கம் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் மற்றும் சாலை,  மின் வசதி அமைக்க வேண்டும்,  வீராபுரம் ஊராட்சி கான்ட்ரா குண்ட்டா  மக்களுக்கு தொகுப்பு வீடுகள்,  சாலை, மின்விளக்கு அமைக்க வேண்டும்,  பெரிய களக்காட்டூர் ஆதிதிராவிட மக்க ளுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த னர். பழங்குடி இன மக்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தையும் பழங்குடி இன மக்களுக்கு செலவு செய்யாமல் பணத்தை மீண்டும் அரசு கஜானாவிற்கே திருப்பி அனுப்பி யுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வியா ழனன்று (ஏப்.13) திருவலாங்காடு பிடிஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து செல்வ குமார் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் செல்வகுமார்,  பாலசுப்ர மணியம்  ஆகியோர் தலைமையில்  மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு மாவட்டப் பொருளாளர் எஸ்.குமர வேல்,  மாவட்டக் குழு உறுப்பினர் வி.அந்தோணி ஆகியோர் முன்னி லையில்  திருவலாங்காடு பிடிஒ அலுவலகத்தில் புதனன்று பேச்சு வார்த்தை  நடைபெற்றது. அப்போது மேற்கண்ட கோரிக்கைகள் படிப்படி யாக நிறைவேற்றப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். இந்த நிலையில் தொடர் முழக்க போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.