திருவள்ளூர், ஆக 22- கும்மிடிப்பூண்டியை அடுத்த பில்லாக் குப்பத்தில் அரசு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை மீட்டு அங்குள்ள அருந்ததியர் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே, குருவராஜ கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக் குப்பம் கிராமம். இந்த கிராமத்தில், சர்வே எண், 1036 ல், 24 ஏக்கர் பரப்பு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை வசதிபடைத்த தனியார் சிலர் ஆக்கிரமித்து, தைலமரங்கள் வைத்துள்ள னர். இந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை யினர் கண்டு கொள்ளவில்லை. சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த நிலங்களை மீட்டு துண்டு நிலம் கூட இல்லாத அருந்ததியர் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என நீண்ட காலமாக அம்மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து எந்த நடவடிக்கை யும் எடுக்காத வருவாய்த்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படு வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அம்மக் களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பில்லாக்குப்பத்தில் ஆதிக்க சாதியினருக்கு வழங்குவது போன்று, பட்டிய லின மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இட நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதியதாக தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும், பில்லாக்குப்பத்திற்கு உட்பட்ட 24 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை மீட்டு, துண்டு நிலம் கூட இல்லாத நிலமற்ற அருந்ததியர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.