districts

img

மாற்றுத்திறனாளி தாயின் சுமையை போக்கிய மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மார்ச் 6- 3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு மாற்றுத்திறனாளி மகனை தினமும் தூக்கிச் சென்ற தாயின் சுமையை போக்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அந்த  குடும்பம் நன்றி தெரி வித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அமராவதி தெரு வில் வசித்துவந்த பாண்டியன் மனைவி மங்கை. இவருக்கு முனியப்பன் என்ற மகனும் முனீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மங்கை சங்கராபுரம் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முனியப்பன் (வயது 14) இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் முங்கிள்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை பாண்டியன் சில வருடங்க ளுக்கு முன்னர் உடல்நல குறை வால் இறந்துவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகளும் தாய் மங்கை யாருடைய ஆதரவு மின்றி மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வருகிறார். மாற்றுத்திறனாளி மாண வனான முனியப்பன் கல்வி கற்பதில் ஈடுபாடாக உள்ளதை அறிந்த தாய் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலை களில் வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு  இடுப்பில் சுமந்து சென்று படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் போக்கு வரத்து வசதிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உதவி செய்யு மாறு சமூக வலைத்தளம் மூல மாக  மாணவரின் தாயார் கோரிக்கை விடுத்தி ருந்தார். மாணவரின் கோரிக்கையை சமூக வலைத்தளங்களின் மூல மாக அறிந்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மூலமாக ஆய்வு மேற்கொண்டு மாணவர் முனியப்பனுக்கு தேவையான உதவிகளை செய்திட ஆணை யிட்டுள்ளார். அதன் அடிப்படை யில் மாணவரின் வீட்டிலேயே மருத்துவ உதவியும்,   பள்ளிக்குச் சென்று வர பேட்டரி யால் இயங்கும் வண்டியும் வழங்கப்பட்டது. கோரிக்கை விடுத்த குறுகிய நேரத்திற்குள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மாற்றுத்திறனாளி மாண வன்  முனியப்பனும், தாயார் மங்கையும் நன்றி தெரி வித்துள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பரமணி,  முட நீக்கியல் நிபுணர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.