districts

img

டயாலிசிஸ் மையத்தை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்

அம்பத்தூர் பாடி டி.எம்.பி. நகரில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமூக சுகாதார மையத்தில் ரோட்டரி சங்கம், கேரளா கத்தோலிக்க சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படுக்கை வசதியுடன் கூடிய 12 டயாலிசிஸ் மையத்தை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதனன்று (மே 25) திறந்து வைத்தார். இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, ரோட்டரி மாவட்ட கவர்னர் ஜெ.ஸ்ரீதர், தலைவர் ராமன், செயலாளர் பி.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;