சென்னை எர்ணாவூர் மார்க்கெட்டிலிருந்து 56 எப், 28 கட் சர்வீஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி போக்குவரத்து அதிகாரியிடம் மனுகொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பங்கேற்று பேருந்தை இயக்கி வைத்தார். திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெய்சங்கர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், பகுதி நிர்வாகிகள் செல்வகுமாரி, புஷ்பா, அலமேலு, வெங்கட்டைய்யா (மின் அரங்கம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.