districts

img

நலிந்து வரும் மண்பாண்ட தொழில்

கிருஷ்ணகிரி, ஜன 12- நாகரிக வளர்ச்சி காரணமாக மண்பானைகள் மண்பாண்ட பொருட்க ளின் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதகால பெரு மழையின் காரணமாகவும், கொரோனா நெருக்கடியாலும் மண்பானைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களின் உற்பத்தி முடங்கிப்போனது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லாவி, காட்டேரி, உடையார் தெரு, சிங்காரப்பேட்டை, பாவக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டி ருந்தனர். தற்போது 120 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடு பட்டுள்ளனர். கல்வி அறிவு இல்லாத தாலும், வேறு தொழில் செய்ய பொரு ளாதார வசதி இல்லாததாலும் இந்த தொழிலை செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மழை மற்றும் கொரோனா பாதிப்பால் மண்பாண்ட பொருட்களின் விற்பனை சரிந்து விட்டது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து காட்டேரி பொண்ணு வேல், சக்திவேல், பாவக்கல் முரு கன் ஆகியோர் கூறுகையில், பல தலை முறைகளாக இந்தத் தொழிலை செய்து வருவதாகவும் இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள், மண்பாண்ட பொருட்கள் பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். மண்பாண்ட பொருட்களை 10 ரூபாயில் இருந்து 350 ரூபாய் விலையில் தயார் செய்கிறோம். ஆனால் நாகரிக வளர்ச்சி காரணமாக பொதுமக்கள் மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவது குறைந்து வருவ தால், உற்பத்தியும் விற்பனையும் குறைந்து போனது. இதனால் தற்போது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மண்பாண்டங்களை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால், தயார் செய்த மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி யுள்ளதால் மண் பானைகள் தற்போது விற்பனையாகிறது. ஆனால் கடந்த 2 மாத மழையினால் எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண்பாண்ட பொருட்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.