districts

img

கட்டுமான சங்கத்தின் முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட முடிவுகளை நிறைவேற்ற வேண்டும்

கட்டுமான சங்கத்தின் முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட முடிவுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூன் 19), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், மாவட்ட துணை நிர்வாகிகள் வேலன், கணேசன், முத்து, மணி, சீனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.