districts

கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்...

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வண்ணாரப்பேட்டை எம் சி ரோடு, பிராட்வே என் எஸ் சி போஸ் சாலை, புரசைவாக்கம், மயிலாப்பூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் உள்ள ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.