சென்னை, அக். 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியசென்னை மாவட்ட 24வது மாநாடு சனிக்கிழமையன்று (அக்.19) தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் (காமராஜர் மாளிகை, அயனாவரம்) எழுச்சியுடன் தொடங்கியது. தொடக்க நிகழ்வு தோழர் செ.அரி நினைவு செங்கொடி பயணம் சூளைமேட்டில் இருந்து தொடங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறு முகம் செங்கொடியை எடுத்துக் கொடுக்க, வங்கி அரங்க இடைக்குழுச் செயலாளர் வி.கோபி தலை மையில் கொண்டு வரப்பட்ட கொடியை, மூத்த தோழர் எம்.அபுதாகீர் பெற்றுக் கொண்டார். தோழர் எம்.வெங்கட்ரமணா நினைவு சுடர் பயணத்தை தர்மபு ரத்திலிருந்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலை மையில் கொண்டு வரப்பட்ட சுடரை மூத்த தோழர் எம்.சந்திரன் பெற்றுக் கொண்டார். தோழர் பி.ராமமூர்த்தி நினைவு சுடர் பயணத்தை பெரியமேட்டிலிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். ஏ.நாகராணி தலைமையில் கொண்டு வரப்பட்ட சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.தன லட்சுமி பெற்றுக்கொண்டார். பொதுமாநாடு மாநாட்டு செங்கொடியை மூத்த தோழர் எம்.வி.கிருஷ்ணன், சோச லிசத்தை பறைசாற்றும் முழக்கங்க ளுக்கிடையே ஏற்றினார். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு கண்காட்சியை மூத்த தோழர் பி.சந்திரசேகரன் திறந்து வைத்தார். 3 ஆண்டுகளாக மாவட்டத்தில் நடைபெற்ற போராட்ட காணொளி காட்சி திரையிடலை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி தொடங்கி வைத்தார். பொதுமாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை தலைமை தாங்க, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பிரியதர்ஷினி எம்.சி., வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உரையாற்றினார். பாராட்டு தொழிற்சங்க உரிமைக்கான சாம்சங் தொழிலாளர்களின் மகத்தான வர்க்கப் போராட்டத்தை வெற்றி கரமாக்கிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன் ஆகியோரை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். கட்சி முன்னோடிகள் கவுரவிப்பு உழைக்கும் வர்க்கத்திற்காக 75வயதை கடந்தும் செங்கொடி ஏந்தி களமாடும் முன்னோடிகள் 20 பேரையும், அர்ப்பணிப்போடு தீக்கதிர் நாளிதழை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியர்களையும் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதனும் பாராட்டி கவுரவித்தனர்.