districts

img

குழந்தைகள் மைய மேற்கூரையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர்

கிருஷ்ணகிரி, ஜூன் 10-

      கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை ஒப்பந்ததாரர் சேதப்படுத்தி யது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வரு கின்றனர். இம்மைய கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால், மழைக் காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வரு வதாக புகார் வந்தது. இதனால், மேற்கூரையை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.

      இதையடுத்து, அங்கு வந்த ஒப்பந்த தாரர் அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில், மேற்கூரையை உடைத் தெடுத்து சென்றுள்ளார். இதனால், வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்ததால் கட்டடத்தினுள் இருந்த அனைத்து பொருட்களும் மழையில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு மற்றும் மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின.

    சனிக்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள், மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால் பணி களை துவக்கிவிட்டோம் என பதில் தெரி வித்துள்ளார்.

     இதுகுறித்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனாவிடம் கேட்ட போது, அங்கன்வாடி பணியாளர் பழனி யம்மாள் 2 குழந்தைகள் மையத்தில் பணி புரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தை கள் மைய ஆயாவிடம் தெரிவித்த பிறகு மேற்கூரையை எடுத்துள்ளார். தற்போது மேற்கூரையற்ற குழந்தைகள் மையத்திலிருந்து 15 குழந்தைகள் மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.