கிருஷ்ணகிரி, மார்ச் 8- ஓசூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவ லக வளாகத்தில் ரூ. 20 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. பென்னாகரத்தை சேர்ந்த டி.ஜெயபிரகாஷ் என்பவரின் கட்டு மான நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களான மேற்கு வங்கத்தில் இருந்து ஓசூருக்கு வந்துள்ள 20 க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் கடந்த 7 மாதங்க ளாக இங்கு இரண்டாம் நிலை ஒப்பந்ததாரர் எஸ்.எஸ்.பி கட்டுமான நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இதில் கிருஷ்ணன் என்பவர் 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கட்டுமானம் நடைபெறும் வளா கத்திலேயே தங்கி பணிபுரிந்த தொழி லாளர்கள் இங்குள்ள ஆழ்துளை கிணறு குழாய் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை அறிந்த தொழி லாளர்கள் பல முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் நல கோளாறுகள் ஏற்பட்டது. இதில் பாதிப்புக்குள்ளான 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதில் இருவர் மட்டும் குணமாகி பணிக்கு திரும்பி னர். கிருஷ்ணன் உட்பட இருவர் பெங்களூரு போரிஸ் அரசு மருத்துவ மனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணன் சிகிச்சை பல னின்றி வியாழனன்று (மார்ச் 7) உயிரிழந்தார். கிருஷ்ணனின் உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்து செல்ல ஒப்பந்ததாரர் எந்த உதவியும் செய்ய வில்லை என கூறப்படுகிறது. தற்போது கிருஷ்ணன் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த கிருஷ்ணன் உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்து செல்வதற்கான செலவை எஸ்எஸ்பி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தினர் ஏற்க வேண்டும், கிருஷ்ணனின் தந்தை யும் ஏற்கெனவே இறந்துள்ள நிலையில் அவரின் குடும்பத்தாருக்கு இரண்டாம் நிலை ஒப்பந்ததாரர் போதிய நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான பணிகள் நடந்து வரும் வளாகத்தில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பதை சரி செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை, சுகாதாரமான உறைவிடம் அமைத்துத் தர வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓசூர் மாநகர குழு செயலாளர் சி.பி.ஜெய ராமன் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன்,நிர்வாகி விஜயகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், ஆனந்தகுமார் ஆகியோர் மனு அளித்தனர். இது குறித்து நேரில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்களிடமும் விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சாராட்சியர் பிரியங்கா தெரிவித்தார்.