சென்னை,டிச.14- இந்தியன் வங்கி ஊழி யர்கள் சங்கத்தின் (ஐபிஇஏ) 19வது தமிழ்நாடு மாநில மாநாடு வேலூரில் அ.ரெங்கராஜன் நகரில், சி.சேதுராமச்சந்திரன் நினை வரங்கில் சனிக்கிழமை (டிச.14) எழுச்சியுடன் தொட ங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக சங்க கொடியை மாநிலத் தலைவர் கே.கணேசன் ஏற்றி வைத் தார். பின் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட் டது. மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் எஸ்.ராமன் வரவேற்புரையாற்ற, மாநில செயற்குழு உறுப்பினர் இளையபாரதி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். பொது மாநாட்டை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) அகில இந்திய பொதுச்செய லாளர் தேபசிஸ்பாசு செளத்ரி துவக்கி வைத்து உரையாற்றி னார். அவர் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணியிடங்கள் குறைக்கப்பட்டு, அதிகாரி களின் பணியிடங்கள் அதி கரிக்கப்பட்டுள்ளது. மறு புறம் தனியார் வங்கிகளில் எழுத்தர் பணியிடங்கள் அதி கரிக்கப்பட்டுள்ளது. தற் போது பெரும்பாலான வங்கி கள் ஒப்பந்த அடிப்படை யிலேயே வேலைக்கு ஆட்கள் எடுப்பதன் மூலம் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவும் சொத்தையான வாதமும் தற்போது செயற்கை நுண்ணறிவு வரவால் ஊழி யர்களின் தேவை குறைந்து ள்ளதாக நிர்வாகம் தெரி விக்கின்றது. ஆனால் உண்மை அதுவல்ல தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவு வந்தாலும் வேலையின் செயல்பாடுகள் பரிணாம வளர்ச்சி அடைந்து ஊழியர்களுக்கு பணித்தன்மை அதிகரித் துள்ளது. வேலை, வாழ்க்கை சமநிலை இல்லாததால் பணி நேரம் அதிகரித்துள்ளது. இத னால் பெண் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்ற னர். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக சாதாரண ஏழை எளிய மக்களின் சேமிப்பு ஏமாற்றப்படுகிறது. அவர் களை பாதுகாக்கும் வகை யில் அரசு இதற்கு பொறுப் பேற்று பாதுகாப்பு அம்சங்க ளையும், சட்ட திருத்தங் களை கொண்டு வர வேண்டும். மேலும் ஒன்றிய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதியத்தை கொண்டு வந்துள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். ஆனால் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளன. எனவே அனைவரும் பயன ளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பேசினார். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் ஸ்தாபக பொதுச்செயலாளர் கே.கிரு ஷ்ணன்,பெபி முன்னாள் தலைவர் சிவராமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.டி.சங்கரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் சுனில் குமார் நன்றி கூறினார். பின்னர் மாலையில் துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் ஹரிராவ் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து ஞாயிறன்றும் பிரதிநிதிகள் மாநாடு நடை பெறுகிறது. இம் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப் படவுள்ளது. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்ய ப்படவுள்ளனர்,