districts

img

மனுஅளித்த மறுநிமிடமே சக்கரநாற்காலி வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி, ஜூலை 1- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மறு நிமிடமே சிறப்பு மடக்கு  சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் பிரசாத் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பிரச்சனை மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்த ஆட்சியர் பொதுநலன் குறித்த 603 மனுகளும்,  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 38 மனுக்கள் என மொத்தம் 641 மனுக்களை பெற்றுக்கொண்டார்.அரசு உதவி கோரியவர்களில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நிதிஉதவுகளையும் வழங்கினார். முன்னதாக மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மாணவன் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்தார்.மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சில நிமிடங்களில் சக்கர நாற்காலியினை வழங்கினார்.