districts

img

பழவேற்காட்டில் கடல் அலையின் சீற்றத்தால் இரண்டாக பிளந்தது படகு!

திருவள்ளூர், டிச.16-  பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் கடற்கரையில் பெரிய அலைகள் உயரத்திற்கு கரையை நோக்கி புரண்டு வரும் நிலையில் வழக்கம்போல் திங்களன்று (டிச.16), அதிகாலை பழவேற்காடு அருகே உள்ள வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் மீனவர் இளங்கோ என்பவர் தனக்கு சொந்த மான படையில் ஜானகிராமன், சுந்தர் ஆகி யோருடன் மீன் பிடிக்க சென்றனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே படகு கடலில் சென்றபோது அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த மீன் பிடி பொருட்கள் 80 கிலோ வலை மூழ்கிய நிலையில் மீன வர்கள் கடலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்துள்ளனர். படகு முகத்துவாரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்டுள்ள பாறைகள் மீது இடித்து இரண்டாக உடைந்து சிதறி யுள்ளது. நல்வாய்ப்பாக மீனவர்கள் உயிர் தப்பினர்.