திருவள்ளூர், அக். 22- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிர மிப்புக்கு உள்ளாகி இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் செய்து புதிய ஓட்டு வீடுகள் அமைப்பதாக கூறி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் செவ்வாயன்று (அக் 22), பொன்னேரி வருவாய்துறை துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பக்ருதீன், திருப்பாலை வனம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாளர்கள் காவல்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்று ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணியில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஈடுபட்டனர். இதில் தான் குடியிருக்கும் வீட்டை அகற்ற வேண்டாம் எனக் கூறி 74 வயது மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் வீட்டை விட்டு வெளியே வராமல் அழுது புரண்டது காண்போர் நெஞ்சை கலங்கச்செய்தது. தனக்கு இந்த வீட்டைத் தவிர வேறு வீடு இல்லை எனவும், இதனால் விட்டு விடுமாறும் அதிகாரிகளிடம் கெஞ்சினார். இருப்பினும் மனுதாரர் ஏகாம்பரம் வீட்டை கட்டாயம் இடித்தே ஆக வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பேரில் வீட்டிலிருந்து வயதான பாட்டியை வெளியே தரதரவென இழுத்து வந்து ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர்.