districts

img

கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு இடையே பாகுபாடுகளை நீக்குக! நடவடிக்கை எடுப்பதாக உதவி இயக்குநர் உறுதி

ராணிப்பேட்டை, நவ. 13 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு இடையே பாகுபாடுகளை    போக்கவேண்டும் என்று  ராணிப்பேட்டை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. திங்களன்று (நவ. 11) காஞ்சிபுரம் மத்திய கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ். கிட்டு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய கைத்தறி உதவி இயக்குநர் சிவா கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் சங்கங்கள் இடையே பாகுபாடின்றி அதிகாரிகள் தகவல் வழங்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கைத்தறி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காஞ்சிபுரம் மத்திய கைத்தறி உதவி இயக்குநர் உறுதியளித்துள்ளார். இதில் ராணிப்பேட்டை சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், வாழைப்பந்தல் கிளை தலைவர் ஜி. ராஜசேகர், செயலாளர் பி. தேவன், பொருளாளர் பி. கோபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. சுரேஷ், ஆர். பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.